Wednesday 6 April 2022

Jeyam Kodukum Devanuku ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு


 


ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

கோடி கோடி ஸ்தோத்திரம்

வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு

வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்

 

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்

ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

 

1. நீதியின் கரத்தினால்

தாங்கியே நடத்துவார்

கர்த்தரே என் பெலன்

எதற்குமே அஞ்சிடேன்

 

2. அற்புதம் செய்பவர்

அகிலம் படைத்தவர்

யுத்தத்தில் வல்லவர்

மீட்பர் ஜெயிக்கிறார்

 

3. நம்பிக்கை தேவனே

நன்மைகள் அளிப்பவர்

வார்த்தையை அனுப்பியே

மகிமைப்படுத்துவார்

 

4. உண்மை தேவனே

உருக்கம் நிறைந்தவர்

என்னைக் காப்பவர்

உறங்குவதில்லையே


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.