எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம் பாதம் வந்தேன் --- எந்தன்
2. உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேன் --- எந்தன்
3. நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா --- எந்தன்
4. நாளெல்லாம் பாதத்தில்
கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே
கருணையின் பிரவாகம் நீரே --- எந்தன்
5. சகாயம் பெற்றிட
கிருபாசனம் வந்தேனே
இரக்கங்கள் ஈந்திடுமே
என்றென்றும் தயை காட்டும் தேவா --- எந்தன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.