உந்தன் ஆசி தாரும்
எந்தன் ஏசு தேவா
தந்தையே நான் பணிகிறேன்
1. ஞானம் அற்றவள் நானே
ஞானம் தாரும் தேவா
உம்மையன்றி வழி ஏது
என் கல்வி ஊற்று நீரே
2. பெலன் இல்லாதவள் நானே
பெலனைத் தாரும் தேவா
உந்தன் பெலன் போல் பெலன் ஏது
என் பெலனும் சுகமும் நீரே
3. பக்தி அற்றவள் நானே
பக்தி தாரும் தேவா
பக்தியோடு உம்மைத் தேட
உம் கிருபை தாரும் தேவா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.