Thursday 5 January 2023

Nantriyodu Naan Thuthi Paduven நன்றியோடு நான் துதி பாடுவேன்


 


நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும்நாதனே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியேநன்றியோடு

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமேநன்றியோடு

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால்
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியேநன்றியோடு

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர்
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர்நன்றியோடு


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.