Wednesday, 2 October 2019

Logam Aalum Aandavar லோகம் ஆளும் ஆண்டவர்

Logam Aalum Aandavar
1. லோகம் ஆளும் ஆண்டவர்,
         ஆணும் பெண்ணும் செய்தனர்,
         இரு பேரும் வாழவே
        ஆசீர்வாதம் தந்தாரே.

     2. ஆதலால் விவாகமே
         மேன்மையுள்ள தாயிற்றே;
          இந்த நன்மைக்காகவும்
          ஸ்தோத்திரம் உண்டாகவும்.

       3. தேவ வாக்குக் கேற்றதாய்
           விசுவாச முள்ளோராய்
           நடப்போர்க்கு நன்மையே
           தவறா தளிப்பாரே.

       4. இந்த இரு பேரையும்
           கர்த்தரே கடாட்சியும்
          இவரால் புகழ்ச்சியே
          தேவரீர்க்குண்டாகவே.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.