Friday, 4 October 2019

O Yesu Umathanbu ஓ இயேசு உமதன்பு

O Yesu Umathanbu
ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது

1 அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும் துதிக்க உயர்ந்தது
துதிக்க உயர்ந்தது   --- ஓ இயேசு

2 சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன்
என்றதால் பாடுகிறேன்   --- ஓ இயேசு

3 இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா யென்னைக் கரம் பிடித்தே கர்த்தரே காப்பதாலும்
கர்த்தரே காப்பதாலும்   --- ஓ இயேசு

4 குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர்
திருப்தியாக்குகிறீர்   --- ஓ இயேசு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.