Wednesday, 2 October 2019

Enthan Ullathil Puthu Unarvu எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு

Enthan Ullathil Puthu Unarvu
1.எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு
எந்தன் வாழ்வினில் புதுமலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும்
எந்தன் இயேசுவால் புதிதாயின

புதுவாழ்வு புது ஜீவன் புதுபாடல்
என்னை சந்தித்த இயேசு தந்தார்
ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன்
ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன்

2.கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை
வாசம் செய்த பொல்லா ஆவி
நாதர் பாதம் பணிய நல்ல
அற்புத மாற்றம் பெற்றான்   --- புதுவாழ்வு

3.ஓடையில் உருண்டோடி வரும்
சின்னக் கற்களும் வடிவம் பெறும்
சின்னத் தாவீதுக்கும் கோலியாத்தை
வீழ்த்த கவண்கல் ஆயுதமாகிடும்  --- புதுவாழ்வு

4. கள்ளனும் கொள்ளைக்காரனான
குள்ளன் சகேயுவும் மீட்படைந்தான் 
உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான்
வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான்  --- புதுவாழ்வு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.