Sunday, 6 October 2019

Yesuvai Nambi Patri Konden இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

Yesuvai Nambi Patri Konden
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.