Wednesday, 28 July 2021

Nantriyaal Ponguthe Emathullam நன்றியால் பொங்குதே எமதுள்ளம்


 

நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

நாதன் செய்பல நன்மைகட்காய்

நாள்தோறும் நலமுடன் காத்தனரே

நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

நன்றியால் ஸ்தோத்தரிப்போம்

 

1. கடந்த வாழ்நாளில்  கருத்துடனே

கண்மணிபோல் நம்மைக் காத்தனரே

கண்ணீர் கவலையினை மாற்றினாரே

கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்

 

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து

ஜீவிய பாதை நடத்தினாரே

ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்

ஜீவனின் அதிபதியை அல்லேலூயா

ஜீவனின் அதிபதியை – நன்றியால்

 

3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே

அதிசயங்கள் பல புரிந்தனரே

ஆயிரம் நாவுகள் தான் போதுமா

ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா

ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்

 

4. பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை

பாச கரம் கொண்டு தூக்கினாரே

கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்

கருத்துடன் காத்தனரே அல்லேலூயா

கருத்துடன் காத்தனரே – நன்றியால்

 

5. பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி

பொற்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்

ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே

நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா

நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.