Tuesday 6 July 2021

Kattu Puravin Satham காட்டு புறாவின் சத்தம்


 

காட்டுப் புறாவின் சத்தம் கேட்கிறதே

என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று

கானக்குயிலின் கானம்  இசைக்கின்றதே

மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று                    

      

உம் வருகைவரை நான் காத்திருப்பேன்

என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2

 

1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே

தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றீரே

நீர் எந்தன் நேசர் தானே

நீர் எந்தன் நண்பர்தானே

என்றென்றும் உந்தன் அன்பை

என்னவென்று நான் சொல்லுவேன் -----உம்வருகை

                             

2. கனவெல்லாம் என்றும் உம்மையே காண்கிறேன்

நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே

நீரின்றி நானும் இல்லை

நீர்தானே  எந்தன் எல்லை

என்றென்றும் எந்தன் நாவால்

உம்மையே பாடிடுவேன் -----உம்வருகை

                      

3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே

 உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே

நீர் எந்தன் ஜீவன்தானே

நான் உந்தன் சாயல்தானே

என்றென்றும் எந்தன் மூச்சு

உந்தன் பெயர் சொல்லிடுதே -----உம் வருகைவரை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.