Saturday 17 July 2021

Yesuvukkai Thondu Seithidave இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே


 

இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமிந் நானிலத்தில் வருதே

1. தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசிவரைஏசுவுக்காய்

2. பாவத்தில் மா ஜனம் அழிகிறதே
லோகத்தின் இரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ நடுப்பகலோ
நருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம்- ஏசுவுக்காய்

3. பேதுரு பவுலும் ஸ்தேவானும் அன்று
பெரும் ரத்தசாட்சியாய் மரித்தது போல்
புறப்படுவோம் ஏசுவுக்காய்
போர் முனையில் ஜீவன் வைத்திடவேஏசுவுக்காய்

4. ஒருவரும் கிரியை செய்ய இயலா
இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்
ஏகோபித்து எழும்பிடுவோம்
இயேசுவின் சத்தியம் சாற்றிடவேஏசுவுக்காய்

5. மேகத்தில் ஏசுதான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தை காத்துக் கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை செய்வோம்ஏசுவுக்காய்

 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.