Valvin Oliyanar
வாழ்வின் ஒளியானார்
இயேசு வாழ்வின் ஒளியானார்
என்னை மீட்க இயேசு ராஜன்
வாழ்வின் ஒளியானார் எனது (2) --- வாழ்வின்
1. அக்கிரமங்கள் பாவங்களால்
நிரம்ப பெற்ற பாவியென்னை
அன்பு கரங்கள் நீட்டியே தம்
மார்போடணைத்தனரே (2) --- வாழ்வின்
2. வழி தப்பி தடுமாறும் போது
வழிகாட்டியாய் செயல்படுவார்
வழியில் இருளாய் மாறும் போது
வாழ்வின் ஒளியாவார் (2) --- வாழ்வின்
3. துன்பங்கள் தொல்லை வரினும்
இன்னல்கள் பல வந்திடினும்
இன்னல் தீர்க்க வல்ல இயேசு
இன்னல் அகற்றிடுவார் (2) --- வாழ்வின்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.