Friday, 2 July 2021
Antho Kalvariyil அந்தோ கல்வாரியில்
Antho Kalvariyil Arumai அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்கினார் (2) மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே மாயலோகத்தோ டழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும் குருதி வடிந்தவர் தொங்கினார் வருந்தி மடிவோரையும் மீட்டிடவே அதிசயம் இது இயேசுவின் நாமம் அதிலும் இன்பம் அன்பரின் சிநேகம் அதை எண்ணியே நிதம் வாழுவேன் அவர் பாதையை நான் தொடர்ந்திடவே சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.