Monday, 16 March 2020

Kurusin Mel Kurusin Mel குருசின் மேல் குருசின் மேல்

Kurusin Mel Kurusin Mel 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர் பிராணநாதன் பிராணாநாதன் என் பேர்க்காய்ச் சாகின்றார்

2. பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய் தேவ குமாரன் மா சாபத்திலாயினார்

3. இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன் இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

4. பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் குருசினின் காட்சியைத் தரிசித்துத் தேறுவேன்

6. சத்ருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால் நித்தமும் குருசினின் நேசத்தை சிந்திப்பேன்
7. பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில் ஆவலாய் குருசினின் காட்சியைச் சிந்திப்பேன்

8. சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில் சிலுவையின் நேசத்தைச் சிந்தித்து நோக்குவேன்

9. சத்ருக்கள் கூட்டமாய் சண்டைக்கு சூழ்கையில் சிலுவையில் காண்கின்ற நேசத்தை சிந்தித்தேன்

10. இம்மகா நேசத்தை ஆத்மமே சிந்திப்பாய் இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.