Parir Gethsemane பாரீர் கெத்சமனே
Parir Gethsemane
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும்
பாடுகள் எனக்காயே – பாரீர்
2. அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய
என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்
3. இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே- பாரீர்
4. மும்முறை தரை மீதே
தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே – பாரீர்
5. அன்பின் அருள் மொழியால்
ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நொந்து அலறுகின்றார் – பாரீர்
6. என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து
நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.