Kolkatha Mettinile கொல்கதா மேட்டினிலே
Kolkatha Mettinile
1. கொல்கதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவகுமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்
2. பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்
3. மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவ குமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்
4. இரத்தத்தின் பெரு வெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவ குமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்
5. கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண் கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பினிலே
6. உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.