Aathmame Un Aandavarin
1. ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலுயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று
2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலுயா அவர் உண்மை
மா மகிமையாம் துதி
3. தந்தை போல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலுயா இன்னும் அவர்
அருள் விரிவானதே
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவர் நீர் பக்தரே
அல்லேலுயா அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.