Kalai Velaiyile Nam Nathanai காலை வேளையிலே நம் நாதனை
Kalai Velaiyile Nam Nathanai
காலை வேளையிலே நம் நாதனை போற்றிடுவோம் (2)
துதி மாலையுடன் புகழ் பாடியே (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிவோம் மகிழ்வோம்
1. காலை தோறும் புது கிருபையினால்
நிறைத்திடும் தேவனை வாழ்த்திடுவோம்
குறைகள் யாவும் குருசினில் ஏற்ற (2)
திருமைந்தன் இயேசுவை வணங்கிடுவோம் (2)
சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே
2. பாவத்தை உணர்த்தும் தினம் வழி நடத்தும்
ஆவியாம் தேவனை துதித்திடுவோம்
மூன்றில் ஒன்றாய் அருள் ஒளி சுடராய் (2)
திகழ்ந்திடும் திரியேகரை நமஸ்கரிப்போம் (2)
சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.