Saturday, 25 April 2020

Varuthapattu Paaram Sumapavare வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே

Varuthapattu Paaram Sumapavare வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே வருவீர் இயேசுவண்டை இளைப்பாற 1. தாகமுள்ளவரே வாரும் என்றார் தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார் தண்ணீர் கேட்டார் அவர் தாகம் தீர்த்தார் பாவ மன்னிப்பை கொடுத்து மகிழச் செய்தார் 2. பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீ இருந்தாள் கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள் நம்பிக்கை இழந்தாள் நாதன் இயேசுவைக் கண்டாள் நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள் 3. நாலு நாளாயிற்றே நாறுமென்றாள் நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார் கவலைப்பட்டார் இயேசு கண்ணீர் விட்டார் மரித்தவன் உயிர்த்தே வரச் சொன்னார் 4. நாடு நகரமெல்லாம் சுற்றி அலைந்தார் நானே வழி வேறில்லை என பகர்ந்தார் களைப்படைந்தார் அத்தி மரத்தைக் கண்டார் கனியற்றிருப்பதை கண்டு சபித்தார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.