Saturday, 18 April 2020

Athikaalai Thinam Thedi அதிகாலை தினம் தேடி

Athikaalai Thinam Thedi அதிகாலை தினம் தேடி உம் முகத்தினில் விழித்திடுவேன் புதுக் கிருபை அதைத் தேடி உம் பாதத்தில் அமர்ந்திடுவேன் ஆனந்தம் பேரின்பம் என் அன்பரின் பாதத்திலே ராஜா அல்லேலூயா-என் தேவா அல்லேலூயா 1. கரங்களை விரித்து கர்த்தரைப் பார்த்து காலையில் பணிந்திடுவேன் கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து மகிமையை செலுத்திடுவேன் பாதத்திலே முகம் பதித்து முத்தங்கள் செய்திடுவேன் --- ராஜா 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட கண்களும் விழித்திடுதே உம் மனம் குளிர என் மனம் பாட ஆயத்தமாகிடுதே உம் வசனம் தியானித்திட என் உள்ளம் காத்திடுதே --- ராஜா 3. கண்ணிமை நேரம் உம்மை மறவாமல் கருத்தாய் நினைத்திடவே கனிவாய் இரங்கி கருனை ஈந்து கரத்தால் அணைத்திடுமே நாள் முழுதும் வல்லமையால் நிதமும் நனைத்திடுமே --- ராஜா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.