Thursday, 2 April 2020

Kalvari Katchiyai Kandum கல்வாரி காட்சியை கண்டும்

Kalvari Katchiyai Kandum கல்வாரி காட்சியை கண்டும் கல்நெஞ்சம் கரைந்திடாதோ பாவம் அற்ற பரிசுத்தர் பட்ட பாடுகள் எண்ணி உருகிடாதோ 1. கொடுங் கொல்கதா மலை மேட்டில் கோரப் பாடுகள் சகித்தார் பாரச் சிலுவை தோளில் சுமந்து தள்ளாடியே ஏறுகின்றார் திவ்ய நேசர் எடுத்திட்ட கோலம் எண்ணியே மனம் உருகிடாதோ 2. கை கால்கள் ஆணிகள் பாய திரு ரத்தம் வழிந்தோடுதே முட்கிரீடம் தலையில் குத்த வேதனையால் வாடுகின்றார் திவ்ய நேசர் படும் வேதனையை எண்ணியே மனம் கரைந்திடாதோ 3. ஐங்காயம் ஏற்றிட்ட நாதர் சிலுவையில் தொங்குகின்றார் தீய நிந்தனைகள் ஏற்றார் பரிகாசங்கள் சகித்தார் பாவம் போக்கும் பரிசுத்தர் பாதம் பணிந்தே மனம் கதறிடாதோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.