மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
சரணங்கள்
1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது - நல்ல --- மண
2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா,
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல --- மண
3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல --- மண
4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறை மே தாவி
அன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல --- மண
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.