அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் (2)
1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு – 2
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா
2. சந்திர சூரியன் இல்லை ஆனால்
இருள் ஏதும் காணவில்லை – 2
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமவர் – என்றும் பகல்
3. விதவிதக் கொள்கையில்லை
பலப்பிரிவுள்ள பலகை இல்லை – 2
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும்
4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை – 2
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி
5. பல பல திட்டம் இல்லை
ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை – 2
காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சியில்லை – பேரானந்தமே
6. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை – 2
தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம்
7. இயேசுவின் இரத்ததினால்
பாவம் கழுவினால் செல்லலாமே – 2
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.