Tuesday, 24 September 2019

Motcha Yaathirai Selgirom மோட்ச யாத்திரை செல்கிறோம்

Motcha Yaathirai Selgirom
1.மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் – இம்மாய லோகம்
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்

ஆனந்தமே  ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் வாழுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2.சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே   --- ஆனந்தமே 

3.அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் --- ஆனந்தமே 

4.மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்  --- ஆனந்தமே 

5.கர்த்தர் என் அடைக்கலம் கவலை
இல்லையே – இக்கட்டு துன்ப
நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்  --- ஆனந்தமே 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.