Wednesday, 11 September 2019

Adaikalame Umathadimai Naane அடைக்கலமே உமதடிமை நானே

Adaikalame Umathadimai Naane
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம்  நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை

3. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை

4. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.