Saturday, 28 September 2019

Engum Pugal Yesu Rajanuke எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

Engum Pugal Yesu Rajanuke
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.

1.ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி ஏசுவுக்கிதயம் தந்திடுவீர்

2.கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண் திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்

3.தாழ்மை சற்குணம் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி
பாழுந்துற்குணமும் பாவச் செய்கை யாவும்
பறந்தோட பாற்பதுங்கள் பாரமன்றோ

4.சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே துயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.