Friday, 20 September 2019

Ekala Satham Vanil எக்காள சத்தம் வானில்

Ekala Satham Vanil
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

1.அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

2.வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே தரிசிப்போமே – எக்காள

3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள்  யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

5.கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்
கருத்துடன் நாம் விழித்திருப்போம் – எக்காள

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.