Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ
Aar Ivar Aaraaro
ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார்
சரணங்கள்
1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப்பொருள் தானிவரோ
சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த
மாவலரோ
2. மேசியா இவர் தானோ – நம்மை – மேய்த்திடும் நரர் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ
3. தித்திக்குந் தீங்கனியோ – நமது தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண்
ணொளியோ
4. பட்டத்துத் துரை மகனோ – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ
5. ஜீவனின் அப்பமோதான் – தாகம் தீர்த்திடும்பானமோ தான்
ஆவலாய் ஏழைகள் அடைந்திடு மடைக்கல மானவரி
வர்தானோ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.