Wednesday, 11 December 2019

Bethalehem Oororam பெத்தலகேம் ஊரோரம்

Bethalehem Oororam 1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம் 2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம் 3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம் 4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம் 5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.