Samathanam Oothum
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர் --- சமாதானம்
2. நேய கிருபையின் ஓரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர் --- சமாதானம்
3. ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் --- சமாதானம்
4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே --- சமாதானம்
5. மெய்யாகவே மே சையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே --- சமாதானம்
6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே --- சமாதானம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.