Konja Kalam yesuvukkaga
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப் பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் (2)
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் --- கொஞ்ச
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் (2)
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் --- கொஞ்ச
3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் (2)
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே --- கொஞ்ச
4. பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக (2)
என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை --- கொஞ்ச
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.