Arasanai Kanamalirupomo
அரசனைக் காணமலிருப்போமோ - நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ - யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ - யூத
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே - யூத --- அரசனை
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் - மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே - யூத --- அரசனை
3. அலங்காரமனை யொன்று தோணுது பார் - அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்- நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் - யூத --- அரசனை
4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் - யூத --- அரசனை
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.