Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள்
Vana Thoothar Senaigal
வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினாரே
1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்
தோன்றினர் தூதர்கள் அட்சணமே
அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்
நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை - வானதூதர்
2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏந்திடுவோம்
சென்றனர் பாலனை தரிசிக்கவே
வான் நட்சத்திரத்தின் ஒளியிலே
மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை - வானதூதர்
3. ஏவையின் சாபத்தை நீக்கிடவே
மானிடர் ரூபமாய் ஜென்மித்தார்
பாவிகளை மீட்டு ரட்சிக்கவே
மனுக்குமாரன் வந்துதித்தார்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை - வானதூதர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.