Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை
Pongi Valiyum Deva Kirubai
பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது
1. உலகை மீட்கும் உண்மை உருவே
மாட்டுத் தொழுவில் பிறந்த திருவே
உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின்
அன்பின் உருவே — பொங்கி
2. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உள்ளமெல்லாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே — பொங்கி
3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்த விந்தை தெய்வம்
உலகெல்லாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் — பொங்கி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.