Tuesday 31 May 2022

Jeevanulla Devan Ennodirupathal ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்


 


ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்

எனக்கு என்ன கவலை

ஜீவனுள்ள தேவன் என்னோடிருப்பதால்

எனக்கு ஏது கவலை

இல்லை கவலை எனக்கு இல்லை கவலை

ஏது கவலை எனக்கு ஏது கவலை

 

1. அஞ்சாதே முதலும் முடிவும் நான் என்றதால்

எனக்கு ஏன் கவலை

ஆபத்து காலத்தில் தப்புவிப்பேன் என்றதால்

பயமே எனக்கு இல்லை

 

2. வாக்கு மாறா வல்லவர் என்னோடிருப்பதால்

எனக்கு ஏன் கவலை

சர்வ வல்லவர் நிழலில் நான் உள்ளதால்

பயமே எனக்கு இல்லை

 

3. வாதை உன் கூடாரத்தை அணுகாது என்றதால்

எனக்கு ஏன் கவலை

வழிகள் எல்லாம் என்னைக் காக்க தூதர்கள் உள்ளதால்

கலக்கம் ஏதுமில்லை

 

4. நித்தம் என்னை நடத்துவேன் என்று நீர் சொன்னதால்

எனக்கு என்ன கவலை

என் கிருபை போதும் என்ற வாக்கு இருப்பதால்

பயமே எனக்கு இல்லை

 

5. என்னை விசுவாசி அற்புதங்கள் காண்பாய் என்றதால்

எனக்கு என்ன கவலை

பரிசுத்தமாய் வாழ்ந்து பலர் பரத்துக்கு வரணுமே

அதுதான் எந்தன் கவலை


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.