1.யேசுவே நீர் நல்ல நண்பர்
பாவம் துக்கம் சுமந்தீர்
பாரம் முற்றும் நீக்க எந்தன்
வேண்டல் அன்பாய்க் கேட்கிறீர்
உந்தன் ஆவல் உணராமல்
சாந்தி முற்றும் இழந்தோம்
உந்தன் மீது வைத்திடாமல்
நோவு முற்றும் சுமந்தோம்
2. சோதனை போராட்டம் மிஞ்சித்
துன்பம் மூடும் வேளையில்
அஞ்சிடாதே யேசு நோக்கிக்
கெஞ்சி வேண்டிக் கொள்ளவே
உந்தன் துக்கம் தாங்கிக் கொள்ள
நண்பர் மீட்பரல்லவோ
உந்தன் சோர்பெல்லா மறிந்த
யேசுவண்டை ஓடி வா
3. பாரம் பொங்கிச் சோர்பு மிஞ்சி
ஆழ்த்தும் வேளை ஓடி வா
பாதுகாவல் யேசு தானே
வேறே தஞ்சமில்லையே
நண்பர் எல்லாம் கைவிட்டாலும்
யேசு சேர்த்துக் கொள்வாரே
மார்போடுன்னைச் சேர்த்தணைத்து
விண்ணில் வாழச் செய்குவார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.