Monday, 25 November 2019

Yorthan Nathiyoram Thigaiyaathe யோர்தான் நதியோரம் திகையாதே

Yorthan Nathiyoram Thigaiyaathe
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே

1.வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கென்றும் மாறிப் போகாதே    - யோர்

2.வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே            - யோர்

3.உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே            - யோர்

4.கானானினோரமே காதலின் நாடதே
காணுவேன் தேசம் ஆ என்ன இன்பமே        - யோர்

5.பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே            - யோர்

6.ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம்  தரித்திடலாமே            - யோர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.