Wednesday, 13 November 2019

Potriduvom Pugalnthiduvom போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

Potriduvom Pugalnthiduvom
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே (2)

1.தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெமைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நான் துதித்திடுவோம் – போற்றிடுவோம்

2. கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே – போற்றிடுவோம்

3.ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மைத் தன் சுதராய் – போற்றிடுவோம்

4.ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியாரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின்  நற்கந்தமாக்கினாரே – போற்றிடுவோம்

5.சீயோனே மாசாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தில் – போற்றிடுவோம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.