Friday, 1 November 2019

Kalvariye Kalvariye கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே

1. பாவி துரோகி சண்டாளன்
    நானாயினும்
   பாதகம் போக்கிப்
   பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன்
    இயேசு தம்
    ஜீவனின் இரத்தத்தைச்
    சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக
   ஆதரவற்றோராய்ப்
   பாதகர் மத்தியில் பாதகன்
    போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூராணி
    மீதினில்
    கள்ளனை போல என்
    நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும்
    சொர்லோக நாயகன்
    கர்மத்தின் கோலமாய்
    நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும்
    என்னிலே இல்லையே
   பின்னை ஏன் நேசித்தீர்
   என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை யான்
    எங்குமே காணேனே
   எவ்விதம் இதற்கீடு
   ஏழையான் செய்குவேன் – கல்வாரியே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.