கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே
1. பாவி துரோகி சண்டாளன்
நானாயினும்
பாதகம் போக்கிப்
பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே
2. பாவியை மீட்கவே நாயகன்
இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச்
சிந்தின உன்னத – கல்வாரியே
3. நாதன் எனக்காக
ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன்
போல் தொங்கும் – கல்வாரியே
4. முள்முடி சூடியே கூராணி
மீதினில்
கள்ளனை போல என்
நாயகன் தொங்கிடும் – கல்வாரியே
5. சர்வம் படைத்தாளும்
சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய்
நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே
6. எண்ணும் நன்மை ஏதும்
என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர்
என்னை என் பொன் நாதா – கல்வாரியே
7. இவ்வித அன்பை யான்
எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு
ஏழையான் செய்குவேன் – கல்வாரியே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.