கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
சேற்றிலிருந்து தூக்கியெடுத்து
தேற்றி அணைத்துக் காத்துக் கொண்டாரே --- தேவசுதன்
1. பாவியை மீட்கப் பரன் சித்தங் கொண்டார்
பரலோகந் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ்வேழையைத் தேடி வந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ --- பூவுலகில்
2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத்தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
தம்மை பலியாய்த் தத்தம் செய்தாரே --- எந்தனுக்காய்
3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடு வராது காக்கும் நல்மேய்ப்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
இன்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் --- இறையவனை
4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக்குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன்மலையில் --- நித்தியமாய்
5. குயவனின் கையில் களிமண்ணைப் போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னை
காத்துக்கொள்ளும்படி கருணை கூர் ஐயா --- ஏழையென்னை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.