Wednesday 6 November 2019

Koda Kodi Sthothiram Padi கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி

Koda Kodi Sthothiram Padi 
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
சேற்றிலிருந்து தூக்கியெடுத்து
தேற்றி அணைத்துக்  காத்துக் கொண்டாரே  --- தேவசுதன்

1. பாவியை மீட்கப் பரன் சித்தங் கொண்டார்
   பரலோகந் துறந்து பாரினில் பிறந்தார்
   பரமனிவ்வேழையைத்  தேடி வந்தாரே
  பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ  --- பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
   தாசனின் கோலம் தாமெடுத்தணிந்து
   தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
   தம்மை பலியாய்த்  தத்தம் செய்தாரே --- எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
    கேடு வராது காக்கும் நல்மேய்ப்பர் 
    இன்று மென்மேலே வைத்த  நேசத்தால்
   இன்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் --- இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
    சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
   தாழ்மையான ஆட்டுக்குட்டியுடனே
   தங்கியிருப்பேன் சீயோன்மலையில்  --- நித்தியமாய்

5. குயவனின் கையில் களிமண்ணைப் போல
    குருவே நீர் என்னை உருவாக்குமையா
   மாசற்ற மணவாட்டியாய் என்னை
   காத்துக்கொள்ளும்படி கருணை கூர் ஐயா  --- ஏழையென்னை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.