Tuesday, 12 November 2019

Aanantha Padalgal Padiduven ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Aanantha Padalgal Padiduven
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே – ஆனந்த

1.மேலாக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் – ஆனந்த

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசு நாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரதில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே --- ஆனந்த

3. கானானின் கரையிதோ காண்கின்றதே எந்தன்
காதலன் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக ஓட்டத்தை முடித்திடுவோம் – ஆனந்த

4. அற்புதமாம் அவர் நேசமது எந்தன்
பொற்பரன் சேவையென் சோகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே --- ஆனந்த

5.அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் – ஆனந்த

6. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் – ஆனந்த

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.