1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் – 2
2. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
தன் ஆத்மத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் --- பேசும்
3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி அன்பால் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும் --- பேசும்
4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையே செல்லுவேன்
ஆசித்துத் தாறேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் --- பேசும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.