Tuesday 26 October 2021

Yesuvin Marbil Naan Sainthumae இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே


 

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே

இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்

பாரிலே பாடுகள் மறந்து நான்

பாடுவேன் என் நேசரை நான் போற்றியே

 

வாழ்த்துவேன் போற்றுவேன்

உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா

 

2. சோதனை யாலென்னுள்ளம் சோர்ந்திடும்

வேதனை யான வேளை வந்திடும்

என் மன பாரம் எல்லாம் மாறிடும்

தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்   - வாழ்த்து

 

3. சிநேகிதர் எல்லாம் கைவிட்டிடினும்

நேசராய் இயேசென்னோடிருப்பதால்

மண்ணில் என் வாழ்வை நான் விட்டேகியே

மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்   - வாழ்த்து

 

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே

என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே

இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன்   - வாழ்த்து

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.