Sunday, 17 October 2021

Karthathi Karthanai கர்த்தாதி கரத்தனை


 


கர்த்தாதி கரத்தனை
இராஜாதி இராஜனை
நான் கெம்பீரித்து பாடுவேன்
நான் கெம்பீரித்து பாடுவேன்

ஆடுவேன் பாடுவேன் மகிழ்ந்திடுவேன்  
அன்பரின் பாதத்தில் அமர்ந்திடுவேன்  --- கர்த்தாதி
 

1. எனக்காக யாவற்றையும்
செய்து முடிப்பார் அவர்
கர்த்தரைத் தேடிடுவேன் என்றும்
எனக்கொன்றும் குறைவில்லையே  --- ஆடுவேன்

2. கர்த்தரை நம்பிடுவேன்
சகலமும் நன்மையாகும்
வாக்குதத்தம் செய்தவர் அவர்
வாக்கொன்றும் மாறிடாரே --- ஆடுவேன்

3. கோழி தன் குஞ்சுகளை
கூட்டி அணைப்பது போல்
சேதம் வராமல் என்னை
அவர் செட்டையில் காத்திடுவார் --- ஆடுவேன்

4. அழுகையின் பள்ளத்தாக்கை
நீரூற்றாய் மாற்றிடுவார்
திறந்த வாசல் ஒன்றை அவர்
எனக்காக வைத்திடுவார் --- ஆடுவேன்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.