Thursday 14 October 2021

Arasanai Kanamalirupomo அரசனைக் காணாமலிருப்போமோ


 

அரசனைக் காணாமலிருப்போமோநமது

ஆயுளை வீணாகக் கழிப்போமோ

 பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோயூதர்

பாடனு பவங்களை ஒழிப்போமோயூத

                                 

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றேஇஸ்ரேல்

ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே

ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்

தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமேயூதஅரசனை

 

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்மேற்குத்

திசை வழி காட்டிமுன் செல்லுது பார்

பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர்

பொன்னடி வணங்குவோம் நடவுமின்றேயூதஅரசனை

 

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்அதன்

அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்

இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்நாம்

எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்யூதஅரசனை

 

4. அரமனையில் அவரைக் காணோமேஅதை

அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே

மறைந்த உடு அதோ பார் திரும்பினதேபெத்லேம்

வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்யூதஅரசனை

 

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டேராயர்

பொற்கழல் அர்ச்சனை புரிவோமே

வன்கண்ணன் ஏரோதைப் பாராமல்தேவ

வாக்கினால் திரும்பினோம் சோராமல்யூதஅரசனை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.