Sunday, 24 October 2021

Paaduvaen Paravasamaguvaen பாடுவேன் பரவசமாகுவேன்


 


பாடுவேன் பரவசமாகுவேன்

பறந்தோடும் இன்னலே


1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து

நிலை கலங்கி ஆழ்த்தையில்

அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து

கடத்தியே சென்ற கர்த்தனை --- பாடுவேன்


2.என்று மாறும் எந்தன் துயரம்

என்றே மனமும் ஏங்கையில்

மாராவின் கசப்பை மதுரமுமாக்கி

மகிழ்வித்த மகிபனையே  --- பாடுவேன்


3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்

உதவுவாரற்றுப் போகையில்

கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து

தாகம்  தீர்த்த தயவை  --- பாடுவேன்


4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி

பட்டினி சஞ்சலம் நேர்கையில்

வான மன்னாவால் ஞானமாய் போஷித்த

காணாத மன்னா இயேசுவை --- பாடுவேன்


5. எண்ணிறந்த எதிர்ப்பினூடே

ஏளனமும் சேர்ந்து தாக்கையில்

துன்ப பெருக்கிலும் இன்முகம் காட்டி

ஜெயகீதம் ஈந்தவரை --- பாடுவேன்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.