பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்தையில்
அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து
கடத்தியே சென்ற கர்த்தனை --- பாடுவேன்
2.என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்கையில்
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி
மகிழ்வித்த மகிபனையே --- பாடுவேன்
3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து
தாகம் தீர்த்த தயவை --- பாடுவேன்
4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
காணாத மன்னா இயேசுவை --- பாடுவேன்
5. எண்ணிறந்த எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
துன்ப பெருக்கிலும் இன்முகம் காட்டி
ஜெயகீதம் ஈந்தவரை --- பாடுவேன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.