லேவியரே ஆசாரியரே
ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே
இயேசுவின் பாதத்தில் பரவசமாய்
பாரத
மீட்புக்காய் கிருபை பெறுவோம் - லேவியரே
1. எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ
நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்
சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்
சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் - லேவியரே
2. விசுவாச வீரர்களாய் எழும்பிடுவோம்
வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம்
பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம்
பரலோக
பலன்களை சேர்த்துக்குவிப்போம் - லேவியரே
3. நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம்
தாழ்மையின் ரூபங்களால் வளர்ந்திடுவோம்
பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
காரிய
சமர்த்தர்களாய் நின்றிடுவோம் - லேவியரே
4. ஜெபத்தின்
ஜெயங்களாய் முன் செல்லுவோம்
தியான ஊற்றுகளில்
தூது பெறுவோம்
மாமிசத்தின்
கட்டுகளை அறுத்திடுவோம்
கண்ணீரின்
பள்ளத்தாக்கில் கர்த்தரைக் காண்போம் - லேவியரே
5. பேச்சின்
தூதர்களாய் பறந்திடுவோம்
நடக்கையின்
நகல்களாய் விரைந்திடுவோம்
சமுதாயக்
கட்டுகளை அறுத்திடுவோம்
நன்மையின்
வாசல்களாய் விழித்திடுவோம் - லேவியரே
6. இயேசுவின்
காயங்களின் கனிகளே நாம்
களிகூர்ந்து
மகிழ்ந்து ஆடிப்பாடுவோம்
அப்போஸ்தல
ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம்
ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம் - லேவியரே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.