நான்
செல்லும் பாதை என்
நேசர் அறிவாரே
நாசம் அணுகாமல் காப்பாரே
1. மரணப் பள்ளத்தாக்கிலும் நான்
வரும் எத்தீமைக்கும் அஞ்சேன்
கருத்தாய்க் காத்திட வாக்குத் தவறிடா
வல்ல ஓர் தேவன் உண்டெனக்கு — நான்
2. கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது
தண்ணீரில்லாப் பாலையன்றோ
கண்ணீரை மாற்றியே சந்தோஷம் பொங்கிடும்
தணணீர்த் தடாகமாய் மாற்றுவார் — நான்
3. பாடுகள் சகித்த இயேசு அவர்
நடந்த பாதை இதல்லோ
ஓடியே வீரனாம் இயேசுவை நோக்கியே
பாடுவேன் நம்பிக்கையுடனே — நான்
4. மண் வாழ்வின் இன்பம் வெறுத்தேன் மேல்
விண் வாழ்வின் இன்பத்தைக் கண்டே
துன்பங்கள் மூலமாய்ச் சுத்தரானோருடன்
பொன் நகரம் சேர்ந்து வாழுவேன் — நான்
5. ஆதரவாய் இடைகட்டி என்னை
ஆனந்தமாயோடச் செய்தார்
ஆவி அச்சாரத்தால் புத்திர சுவிகாரம்
ஆளுகையும் அன்று பெறுவேன் -- நான்
6. மங்கள கீதம் முழங்க சபை
எங்கும் துதிகளைச் சாற்ற
எங்களின் மன்னவன் மங்கிடா நீதியின்
செங்கோலும் ஓங்குமே நித்தியமாய் -- நான்
Saturday, 9 October 2021
Naan Sellum Paathai நான் செல்லும் பாதை
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.