Ootrapada Vendume
ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே
எண்ணெய் அபிஷேகமே
என் தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே
பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே
நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம்
எந்தன் ஆவல் தீர்ந்திடும்
1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே
2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்
3. ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும்
4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கின்றோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.