Ithuve Anukiraga Kalamathayitrae
இதுவே அனுக்கிரக காலமதாயிற்றே
இரட்சண்ய நாளாயிற்றே
எதுவும் தடையின்றி இயேசுவை ஏற்றே
எங்குமே சாட்சி சாற்றே
1. வருகையின் காலமும் நெருங்கி விட்டதே
வசனங்கள் நிறைவேறுதே
திருக்குள்ளவர்களின் செய்கை அப்போதே
மறைவாக போகாதே --- இதுவே
2. காலத்தைக் கருத்தின்றி கடத்தி வைக்காதே
கர்மத்தைப் பிடிக்காதே
பாவத்தைப் பாசமாய் பற்றியிராதே
சாபத்தை சாராதே --- இதுவே
3. யுத்தங்கள் உலகினில் ஓயாமல் நடக்குதே
சித்தமும் வெளியாகுதே
நாடுகளெல்லாமே நடுங்குகின்றதே
நாஸ்திகம் வளர்ந்திடுதே --- இதுவே
4. வானவர் வருகையில் சுத்தர் எழுந்திடுவார்
சீயோனே உயர்ந்திடும்
மகிமையின் சாயல் அடைந்து மன்னவராய்
மாநிலத்தையே ஆண்டிடுவார் --- இதுவே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.